மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு-ஆட்சியர் தகவல்.

by Editor / 24-02-2023 07:55:05am
 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு-ஆட்சியர் தகவல்.

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 மீனவர்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட எஸ்.பி நிஷா ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விபரங்களை கேட்டறிந்தனர்.மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவிக்கும் போது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்ய கடலோர காவல் படை குழுமத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.அப்போது மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Tags :

Share via