தாயின் உடலை பார்த்து கதறிஅழுத முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு சில வாரமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று 10 மணியளவில் பழனியம்மாள் உயிர் பிரிந்தது. இதுகுறித்து சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு விரைந்தார்.
வீட்டிற்கு வந்த ஓபிஎஸ், தனது தாயின் பாதங்களைத் தொட்டு கதறி அழுதார். இது காண்போர் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினரும், ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ஏராளமான கட்சி பிரமுகர்கள் அவரது வீட்டில் குவிந்து அஞ்சலி செலுத்த திரண்டு வருகின்றனர்.
Tags :