சமூக வலைதளத்தில் முதல்வரை விமர்சனம் செய்ததாக ஜான்ரவி குஜராத்தில் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சியை சேர்ந்த அரசு வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் பந்தநல்லூர் போலீசில் புகார் மனு தாக்கல் செய்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஜான் ரவி என்பவர் தற்போது சென்னையில் வசித்து வரும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் கருணாநிதி, துரைமுருகன் படத்தை வைத்து தமிழக முதல்வரை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். ஜான்ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதன் அடிப்படையில் பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குஜராத்தில் இருந்த ஜான்ரவியை கைது செய்தனர்.
Tags :