விளையாடிக் கொண்டிருந்தவர் பலி

by Staff / 02-03-2023 03:24:31pm
விளையாடிக் கொண்டிருந்தவர் பலி

சமீபகாலமாக இளம் வயதிலேயே மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தெலங்கானாவின் செகந்திராபாத்தில் உள்ள மல்காஜிகிரியை சேர்ந்த பரமேஷ் என்ற வாலிபர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, ​​அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட மாரடைப்புதான் இளைஞரின் மரணத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது.

 

Tags :

Share via