ரத்தக்காயங்களோடு சிறப்பு உதவி ஆய்வாளர் 2 வது  மனைவி உடல் மீட்பு..கொலையா.?

by Editor / 02-03-2023 07:55:18pm
ரத்தக்காயங்களோடு சிறப்பு உதவி ஆய்வாளர் 2 வது  மனைவி உடல் மீட்பு..கொலையா.?

தேனி மாவட்டம் கம்பம் நகர் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர்  ஜெயக்குமார்.இவர் தனது இரண்டாவது மனைவி அமுதாவுடன் கம்பம் மெட்டு காலனி இரண்டாவது தெருவில் வசித்து வருகிறார்.

இன்று காலை அவரது வீட்டுக் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் அடைத்திருப்பதை கண்ட அருகில் உள்ள வீட்டினர் சப்தம் கொடுத்துள்ளார்.அப்படியிருந்தும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவைத் திறந்து பார்த்துள்ளனர்.அப்போது அமுதா பலத்த காயங்களுடன் உடலில் ஆடையின்றி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலினை தொடர்ந்து விரைந்துவந்த கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி தலைமையிலான போலீசார், சிறப்பு உதவி சார்பு ஆய்வாளர் மனைவி மர்மமான முறையில் இறந்து கிடப்பது குறித்து சார்பு ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தினர். பின் தடயவியல் துறை அதிகாரிகளை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர்.இந்த சம்பவம் எப்படிநடந்தது ..?இது கொலையா..? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சார்பு ஆய்வாளரின் இரண்டாவது மனைவி மர்மமான முறையில் உடலில் ஆடையின்றி காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via