கார் மின்கம்பத்தில் மோதி விபத்து

by Staff / 03-03-2023 04:33:22pm
கார் மின்கம்பத்தில் மோதி விபத்து

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜன் மகன் சிவகுமார் (வயது 47). இவர் கயத்தாறில் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வருகிறார். நேற்று மதியம் 3 மணிக்கு கயத்தாறில் இருந்து கழுகுமலைக்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார். கழுகுமலை அருகே உள்ள வேலாயுபுரம் - ஜம்புலிங்கபுரம் இடையே உள்ள பெரிய வளைவு பாதையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை பள்ளத்தின் அருகே உள்ள மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.இதில் மின்கம்பத்தின் அடிப்பாகம் இரண்டாக உடைந்து மின்கம்பம் காரில் சாய்ந்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரின் உள்ளே சக்கியிருந்த சிவகுமாரை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் லோசன காயங்களுடன் தப்பினார். தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கழுகுமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, விபத்து அபாயத்தை தவிர்த்தனர். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via