கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
ஈரோடு மாவட்டம், கிளாம்பாடியை அடுத்துள்ள முனியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பன் (78). இவரது மனைவி லட்சுமி (73). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.சுப்பன், முனியப்பம்பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். மேலும், ஆடுகள் வளர்த்து வருவதால் அவற்றையும் மேய்த்து வருவாராம்.இந்த நிலையில், நேற்று முன் தினம் சுப்பன் காலை 11 மணியளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.ஆனால், மாலை 5 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது இளைய மகன் பரமசிவம் என்பவர் அவரைத் தேடியுள்ளார்.அப்போது, சுப்பன் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகள் அங்கிருந்த கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்தன.இதையடுத்து பரமசிவம் அங்கு சென்று பார்த்துள்ளார். நீச்சல் தெரியாத சுப்பன் ஒருவேளை கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் எனும் சந்தேகத்தின்பேரில் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பேரில், அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடியதில் சுப்பன் உடல் மீட்கப்பட்டது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது சுப்பன் தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து, மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :