இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது வழக்கு

by Staff / 05-11-2023 04:15:49pm
இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது வழக்கு

வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 பேர் மீது நேற்று தாக்குதல் நடத்தினர். வேதாரண்யம் அருகே வானவன்மகாதேவி கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். மீனவர்களை தாக்கி ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

 

Tags :

Share via