கடை உரிமையாளரை காரில் கடத்தி ரூபாய் 14 லட்சம் பறிப்பு

by Staff / 24-04-2022 12:41:34pm
கடை உரிமையாளரை காரில் கடத்தி ரூபாய் 14 லட்சம் பறிப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மருந்து கடை உரிமையாளரை காரில் கடத்தி 14 லட்சம் ரூபாயை பறித்த 4பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கல்லலை  சேர்ந்த அருள்ராஜ் என்பவர் காரைக்குடியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட சிலர் வெங்கட்ராம் புரத்தில் உள்ள அவரது இடத்தை விலைக்கு அல்லது குத்தகைக்கு தரும்படி கேட்டு உள்ளனர். இதை அடுத்த இடத்தை காண்பிப்பதற்காக அருள்ராஜ் சென்றபோது அங்கு காரில் வந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரை கடத்திச் சென்றனர் .பின்னர் செல்போன் மூலம் அருள்ராஜ் நண்பர்களிடம் பேச வைத்து அவசர தேவை எனக் கூறி 14 லட்ச ரூபாய்க்கு பெற்றுள்ளனர். மேலும் ஏடிஎம் கார்டு மூலம் 15 ஆயிரம் ரூபாய் பணம் தங்க மோதிரம் சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அந்த கடத்தல் கும்பல் திருக்கோஷ்டியூர் பைக்குடிப்பட்டி  என்ற இடம் அருகே அருள்ராசா இறக்கிவிட்டு விட்டு  கடத்தல் கும்பல் தப்பினார்கள்.இந்தநிலையில்   அருள்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via