பில்கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துக்களை பரிசளித்த பிரதமர்

by Staff / 30-03-2024 12:02:29pm
பில்கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துக்களை பரிசளித்த பிரதமர்

இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸுக்கு தூத்துக்குடியில் கடல் பகுதியில் எடுத்த முத்துக்களை பிரமதர் மோடி பரிசாக வழங்கினார். இந்தியாவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அந்நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அப்போது, பிரதமர் மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி, நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பில்கேட்ஸ், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது, காலநிலை மாற்றம் குறித்து கலந்துரையாடினர். தொடர்ந்து, பிரதமர் இல்லத்திற்கு வந்த பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார்.

 

Tags :

Share via