தனியாக ஒட்டகத்தில் சென்று தடுப்பு ஊசி செலுத்திவரும் செவிலியர்

by Editor / 25-12-2021 09:38:03am
தனியாக ஒட்டகத்தில் சென்று தடுப்பு ஊசி செலுத்திவரும் செவிலியர்

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஆளில்லாத டிரோன் மூலமாகவும் தடுப்புசிகள் அனுப்பி மக்களுக்கு செலுத்தப்பட்டு கொரோனா தொற்று இல்லாத நாடாக மாற்றும் முயற்சியில்  பிரதமர்,மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள்  தீவிர  முயற்சிகள்மேற்கொண்டு வருகின்றனர்.

இது தவிர கிராமங்களிலும், போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களிடமும் தடுப்பூசியை கொண்டு சேர்க்கும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் வீடுகளை தேடிச் சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சுகாதார பணிசெவிலியர்  ஒருவர் ஒட்டகத்தில் பயணித்து கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இதனை அர்பணிப்பு மற்றும் உறுதியின் அடையாளம் என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து, ஒத்தையில் ஒட்டகத்தில் சென்று மக்களின் உயிர்காக்க பணியாற்றிவரும் அந்த செவிலியருக்கு அந்த மாவட்ட மக்கள்,மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும்      தெரிவித்து வருகின்றனர். 

தனியாக ஒட்டகத்தில் சென்று தடுப்பு ஊசி செலுத்திவரும் செவிலியர்
 

Tags :

Share via