ஒரே நாளில் 2 இடங்களில் தீ விபத்து
சென்னிமலையில் நேற்று இறந்தவர் ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற போது பட்டாசு வெடித்துள்ளனர். அதில் தீ பொறிகள் பரவியதால் கருப்பணங்கோவில் பள்ளம் என்ற இடத்தில் ரோட்டோரம் கிடந்த குப்பைகளில் தீ பிடித்துள்ளது. பின்னர் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர்.அதேபோல் நேற்று மாலையில் சென்னிமலை, உப்பிலிபாளையம் ரோட்டில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். யாரோ பீடி, சிகரெட் பிடித்தவர்கள் தீயை அணைக்காமல் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சென்னிமலை பகுதியில் 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Tags :