சாலைப்போடும் பணியை படமாடுத்தவர் மீது தாக்குதல் 

by Editor / 16-03-2023 09:21:44am
சாலைப்போடும் பணியை படமாடுத்தவர் மீது தாக்குதல் 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சந்தை பகுதியில் நகை கடை நடத்தி வருபவர் முருகன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் குலசேகரம் பகுதியில் இருந்து வலியாற்றுமுகம் சாலை வழியாக தக்கலை சென்று கொண்டிருந்தார். அப்போது வலியாற்றுமுகம் பகுதியில் சாலையில் தார் போட்டு கொண்டிருந்தனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்களை அனைத்தும் தடுத்து நிறுத்த பட்டு போக்கு வரத்து ஒழுங்கு செய்து, பின்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைத்து வாகனங்களும் சென்றன.இந்த நிலையில் முருகன் சென்ற வாகனத்தை மட்டும் தடுத்து நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தன் செல்போனை கொண்டு அந்த நபர்களை படம் பிடிக்க முயன்ற நிலையில் நீ என்ன பத்திரிகையாளரா? என கேட்டு கிழே தள்ளி விட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த முருகன் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர் ஸ்டாலின் உட்பட நான்கு பேர் மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via