செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் தொகுதியைச் சேர்ந்தவர் செல்வா வயது 38. இவர் தினமும் மது மற்றும் கஞ்சா போதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து அவரது அம்மா வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கூறி கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பஜார் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை அவரது உறவினர்கள் சாதுரியமாக பேசி கீழே இறங்க வைத்த பின் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags :