அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை..? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

by Editor / 19-03-2023 09:10:53am
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை..? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

அதிமுக பொதுக்குழு கடந்த 2022 ஜூலை 11இல் நடந்தது.இந்த பொதுக்குழுவில்   நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, மனுதாக்கல் நடைப்பெற்றுவருகிறது. எனவே இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவுள்ளது. நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று காலை 10 மணிக்கு இந்த வழக்கை விசாரிக்கிறார்.
 

 

Tags :

Share via