மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை
கேரளாவின் மலப்புரத்தில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனை, அபராதம் மற்றும் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிலம்பூர் விரைவு சிறப்பு நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு அபராதத் தொகையாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் 2013ல் நடந்தது. தந்தையின் கொடூர செயலுக்கு ஆளான போது, சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
Tags :