மின் வேலியில் சிக்கி டிரைவர் பலி விவசாயி கைது

by Staff / 02-04-2023 02:22:43pm
மின் வேலியில் சிக்கி டிரைவர் பலி விவசாயி கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த சின்னமடம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ், 55; லாரி டிரைவர். இவர், நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் ராமதாஸ் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடினர். அப்போது அங்குள்ள ஒரு நிலத்தில், ராமதாஸ் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடல், கருகிய நிலையில் இருந்ததால் அவரது குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். பிரபு என்பவரது நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தனது தந்தை ராமதாஸ் இறந்ததாக, அவரது மகன் கிரிதரன், வளவனுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார், ராமதாஸ் உடலை கைப்பற்றி, பிரபுவிடம் விசாரணை நடத்தினர். அதில் பிரபு, அவரது நிலத்தில் வேர்க்கடலை பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தாமல் இருக்க மின்வேலி அமைத்துள்ளார். ராமதாஸ் மின் வேலியில் சிக்கி இறந்து கிடந்ததைப் பார்த்த பிரபு, தடயத்தை மறைக்க ராமதாஸ் உடலை எடுத்துச்சென்று அருகில் உள்ள மற்றொருவரின்நிலத்தில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து, வளவனுார் போலீசார் பிரபு, 37; மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via