பல் மருத்துவர் வீட்டில் திருடப்பட்ட நகை பணம் மீட்பு: பெண் கைது

by Editor / 24-11-2023 08:20:24am
 பல் மருத்துவர் வீட்டில் திருடப்பட்ட நகை பணம் மீட்பு: பெண் கைது

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் அரசு பல் மருத்துவர் வீட்டில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர்.

கிருஷ்ணாபுரம் வ உ சி தெருவை சேர்ந்தவர் லதா.அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் திருமணத்திற்கு செல்வதற்காக பீரோவில் இருந்த நகைகளை எடுக்க பீரோ சாவியை அவர் தேடி உள்ளார் .சாவி கிடைக்காததால் பீரோவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் ,பணம் உள்ளிட்டவை காணவில்லை என்பது தெரியவந்ததாம். இதைத்தொடர்ந்து கடையநல்லூர் போலீஸில் அவர் புகார் செய்தார்.

புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மருத்துவர் லதாவின் வீட்டில் வேலை பார்ப்பவர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வீட்டில் வேலை செய்து வந்த கிருஷ்ணாபுரம் செவல்விளை தெருவை சேர்ந்த செல்வி பீரோவில் இருந்த பணம், நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சில நகைகளை அவர் விற்பனை செய்ததும் ,சில நகைகளை உருக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். திருடப்பட்ட நகை மற்றும் ரொக்கத்தின் மதிப்பு ரூ. 7.50 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர்.

 

Tags : கடையநல்லூர் அருகே பல் மருத்துவர் வீட்டில் திருடப்பட்ட நகை பணம் மீட்பு: பெண் கைது

Share via

More stories