அரசு பஸ், லாரி மோதி கோர விபத்து - 3 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து மதுரைக்கு 47 பயணிகளுடன் அரசு பேருந்து ன்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து சிவகங்கை குயவன்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மதுரையிலிருந்து சிமெண்ட் கற்கள் ஏற்றிவந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அந்த லாரி சாலை ஓரமாக கவிழ்ந்தது. பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்து பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :