பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த மூன்று பேருக்கு வாந்தி மயக்கம் 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

by Editor / 20-06-2022 05:03:56pm
 பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த மூன்று பேருக்கு வாந்தி மயக்கம் 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் சாப்பிட்டு  குளிர்பானம் குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.ஆலம்பட்டி  கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன்  என்பவரது குடும்பத்தினர் உணவு உடன் பலா பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனிடையே பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறிய மருத்துவர்கள் சிறுவனின் பிரேத பரிசோதனையில் உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via