பெண்காவலர் தற்காலிக பணி நீக்கம்-மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டே நடவடிக்கை

by Editor / 12-10-2022 10:28:56pm
பெண்காவலர் தற்காலிக பணி நீக்கம்-மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டே நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே உள்ள தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாங்குடி என்பவர் கடந்த செப்டம்பர் 20ம் தேதி 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த மாங்குடி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு லாட்டரி விற்பனை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இருந்த நிலையில் கொலையான மாங்குடியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அவருக்கு கே. புதுப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் ராணி ரமாதேவி என்பவர் மாங்குடி சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு காவல் நிலையத்தில் உள்ள தகவல்களை பரிமாறியது தெரிய வந்ததை தொடர்ந்து காவலர் ராணிரமாதேவி கொலை நடந்த மறு தினமே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
 

 

Tags :

Share via