குடியரசுத் தலைவரின் வருகையை யொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.

by Editor / 08-08-2023 08:53:46am
குடியரசுத் தலைவரின் வருகையை யொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.

புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ 2 வது  நாளாக புதுச்சேரியில் தங்கி உள்ளார்.காலை 5.30 மணியளவில் கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

இவரது பாதுகாப்பிற்காக இரண்டு கடற்படை கப்பல்கள் புதுச்சேரி கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.
கடற்படை ஹெலிகாப்டர் ரோந்து பணியில் ஈடுபட்டது.மேலும் அவர் தங்கிஉள்ள நீதிபதி குடியிருப்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 காலை 9.15 முதல் 9.45 மணி வரை முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கிறார். 10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு  அரவிந்தர் ஆசிரமம் செல்கிறார். அங்கிருந்து 11.15 மணிக்கு காரில் ஆரோவில் மாத்ரி மந்திருக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கேயே மதிய  உணவை முடித்துவிட்டு 2.45 முதல் 4 மணி வரை நடைபெரும் ஆரோவில் கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

பின்னர் 4 மணிக்கு  நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை  புறப்பட்டு செல்கிறார்.குடியரசுத் தலைவரின் வருகையை யொட்டி புதுச்சேரி முழுவதும் பரபரப்பாக உள்ளது. பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுதபட்டுள்ளது.
 

 

Tags :

Share via