பிரசவ வார்டில் நாய் கடித்து பிறந்த குழந்தை பலி

by Staff / 04-04-2023 11:35:38am
பிரசவ வார்டில் நாய் கடித்து பிறந்த குழந்தை பலி

பிரசவ வார்டில் பிறந்த பச்சிளம் குழந்தையை நாய் கடித்து இழுத்துச் சென்ற சம்பவத்தில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. கர்நாடக மாநிலம் சிவமொகா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. குழந்தையை நாய் கடித்து இழுத்துச் செல்வதை அரசு மருத்துவமனையில் உள்ள காவலாளி முதலில் பார்த்துள்ளார். நேற்று காலை ஏழு மணியளவில் நாய் பச்சிளம் குழந்தையில் வாயில் கவ்வியபடி இழுத்துச் சென்றுள்ளது. நாயை விரட்டிப்பிடித்து குழந்தையை மீட்ட நிலையிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நாய் கடிப்பதற்கு முன்பே குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via