பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

by Staff / 04-04-2023 04:44:18pm
பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

சிக்கிம் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலம் கேங்க்டாங் என்ற பகுதியில் பனி படர்ந்த இடங்களில் அதிகம் அளவில் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்கின்றனர். இந்நிலையில், கேங்க்டாங்கை நதுலா என்ற இடத்துடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையின் 15-வது மைல் தொலைவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சுற்றுலாப்பயணிகள் 150 க்கும் மேற்பட்டோர் சிக்கினர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் 30 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories