திருமண ஏக்கத்தால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 04-04-2023 04:39:42pm
திருமண ஏக்கத்தால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

கன்னியாகுமரி களியக்காவிளை அருகே திரித்துவபுரம் ராஜீவ் நகரைச் சார்ந்த மனோகரன் என்பவரது மகன் மகேஷ் (35) பெயிண்டரான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.இவருக்கு ஏராளமான இடங்களில் வரன் பார்த்தூம் ஒன்றும் சரியாகவில்லை. இதனால் இவர் மனம் நொந்த நிலையில் காணப்பட்டாராம்.இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் வெகுநேரமாகியும் மகேஷ் தூக்கம் எழும்பாததைக் கண்டு சந்தேகமடைந்த வீட்டார் அறையின் கதவை உடைத்து பார்த்த போது அறையில் மகேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டாராம்.இது குறித்தூ தகவலறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via