காதலியைக் கொன்று புதைத்த பயங்கரம்

by Staff / 06-04-2023 11:55:23am
காதலியைக் கொன்று புதைத்த பயங்கரம்


ஹரியானா மாநிலம் சோனிபட்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகளை கொண்ட சுனில் என்ற நபருக்கும் மோனிகா (23) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு படிப்புக்காக கனடா சென்ற மோனிகாவை, இந்தியாவிற்கு வரவழைத்து மே 2022இல் சுனில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், மோனிகாவை தனது பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, ​​அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதால், ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் உடலை அங்கேயே புதைத்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

 

Tags :

Share via