பாஜகவினர் மோதல்-காவல்துறையினர் வழக்கு.

by Editor / 28-04-2024 09:25:27am
பாஜகவினர் மோதல்-காவல்துறையினர் வழக்கு.

மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் அலுவலகத்தில்  மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி, அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவத்தில் இவர்கள் மீது அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேரில் சந்தித்தபோது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.இந்தநிலையில் இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags : பாஜகவினர் மோதல்-காவல்துறையினர் வழக்கு.

Share via