திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளைகிரிவலம்.

by Editor / 22-04-2024 08:21:20am
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளைகிரிவலம்.

சித்ரா பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு இன்று (ஏப்ரல் 21) மற்றும் நாளை 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று(நாளை - ஏப்ரல் 23) ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வர். இதனை முன்னிட்டு தமிழ்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,820 சிறப்பு பேருந்துகளும், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று, 527 பேருந்துகளும், நாளை, 628 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. பேருந்தில் பயணம் செய்ய www.tnstc.in என்ற இணையத்தளத்தில் பக்தர்கள் முன் பதிவு செய்துகொள்ளலாம்.

 

Tags : கிரிவலம்

Share via