கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் சுட்டுக் கொலை

by Staff / 28-03-2023 02:26:26pm
கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் சுட்டுக் கொலை

பெரம்பலூர்: மங்களமேடு நரிஓடையைச் சேர்ந்தவர் ரஜினி(47). இவருக்கு மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். ரஜினிக்கு அதே பகுதியைச் பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது அப்பகுதியில் உள்ள அஜித்(26) என்பவருக்கு தெரிந்துள்ளது. இந்த தகவலை ஊரெங்கும் பரப்பியவர் அஜித் தான் என்று நினைத்த ரஜினி தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். நேற்றிரவு இயற்கை உபாதைக்காக அஜித் வெளியே சென்றபோது பின்தொடர்ந்த ரஜினி நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தலையில் பலத்த குண்டு அடிபட்டு நிகழ்விடத்தில் சுருண்டு விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 

Tags :

Share via