மூதாட்டி தற்கொலை.

by Staff / 06-04-2023 04:17:43pm
மூதாட்டி தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆளூர் தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவரது மனைவி தங்கமணி (வயது 68). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தங்கமணி கடந்த சில மாதங்களாக உடல்நலம் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இறந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்க அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தங்கமணி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via