சாலையில் மயங்கி விழுந்த முதியவர் பலி

by Staff / 06-04-2023 04:28:01pm
சாலையில் மயங்கி விழுந்த முதியவர் பலி

தக்கலை அருகே மணலி சந்திப்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பத்மநாபபுரம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியோர் உறவினர்களை விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 15 நாட்கள் ஆன பிறகு இறந்த முதியவரை தேடி உறவினர்கள் யாரும் வரவில்லை. தற்போது முதியவரின் உடல் தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் உள்ளது. இன்று ஒரு வாரத்திற்குள் இவரது முகவரி கண்டு பிடிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட வில்லையெனில் அரசு மூலம் உடல் அடக்கம் செய்யப்படும் என தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தெரிவித்தார். 15 நாட்களாக முதியவர் உடலை உறவினர்கள் யாரும் வாங்க வராததால் என்ன செய்வதென தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via