கட்டபொம்மன் கோட்டையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் வீரச்சக்க தேவி ஆலய குழு சார்பில் நடந்த விழாவுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் தலைமை தாங்கினார். காலையில் வீரச்சக்கதேவி ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாட்டுக்கு கோமாத பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து வீரச்சக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட இசை பள்ளி சார்பில் பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி மற்றும் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
Tags :