நெல்லை நாட்டு வெடிகுண்டு வீசி கொலைமுயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கைது.

by Editor / 17-01-2023 10:29:13am
நெல்லை நாட்டு வெடிகுண்டு வீசி கொலைமுயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கைது.


நெல்லை டவுன் பகுதி குற்றால ரோட்டில் நேற்று இரவு நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அங்கு வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் விட்டுச் சென்ற இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து நெல்லை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றும் அப்பகுதியில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் டவுன் பகுதியில்  போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் தற்போதும் பரப்பரப்பண சூழல் நிலவி வருகிறது.இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சாப்பிட சென்ற இரண்டு பேரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது தெரியவந்தாதைத்தொடர்ந்து  இந்த வழக்கில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்என்பது தெரியவந்துள்ளது.அவர்களிடம் தொடர்ந்து மாநகர போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

Tags :

Share via