போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த மின்வாரிய ஊழியர் பலி

by Staff / 07-04-2023 05:08:52pm
போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த மின்வாரிய ஊழியர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 34), இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அதே கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி (28) என்பவர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இந்நிலையில் வினோத் நேற்று முன்தினம் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று மனைவியின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை நகல் கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் இன்ஸ் பெக்டர் ரோந்து பணியில் சென்றதால் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறியதாக கூறப்படுகிறது.அப்போது மனைவி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த வினோத் போலீஸ் நிலையம் முன்பு உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அருகில் இருந்த மணலை வினோத் உடல் மீது வீசி தீயை அணைத்தனர். அதற்குள் வினோத்தின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டன.உடனடியாக அவரை செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்க்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via