குட்டையில் கிடந்த அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் - போலீசார் விசாரணை.

by Staff / 08-04-2023 05:46:42pm
குட்டையில் கிடந்த அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் - போலீசார் விசாரணை.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருமங்கலக்குடி ஆண்டவர் பள்ளியின் பின்புறம் உள்ள குட்டையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிகுந்த அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினர் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via