நிபா வைரஸ் எதிரொலியாக தென்காசி மாவட்டம் தமிழக - கேரளா எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறை தீவிர சோதனை- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

by Staff / 13-09-2023 05:12:32pm
நிபா வைரஸ் எதிரொலியாக தென்காசி மாவட்டம் தமிழக - கேரளா எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறை தீவிர சோதனை- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கேரளாவில் தற்போது வரை நிபா வைரஸ் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இதனால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நிபா வைரஸ் எதிரொலியாக 
தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி  தென்காசி மாவட்டதின் தமிழக-கேரள எல்லை பகுதியாக விளங்ககூடிய புளியரை சோதனை சாவடியில் சுகாதார துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

கேரளாவில் இருந்து தமிழகத்தில் நுழையக்கூடிய வாகனங்களை சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் உடல் வெப்ப பரிசோதனையை கண்காணித்து வருகின்றனர்.
இதில் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்த செல்லப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த சோதனையில் 24 மணி நேரமும் சுகாதாரத் துறையினர் மூன்று குழுக்களாக செயல்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு நிபார் தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும் வைரஸ் பழம் தின்னி வௌவால்கள் கடித்த படங்களை சாப்பிடும் மனிதர்களுக்கும் பரவி ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் வருவதாகவும் நிபா வைரஸால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு தடுப்பூசிகள் இல்லை என்றும் நோய் பாதிக்கப்படும் மனிதர்கள் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நோய் எல்லா வயது உடையவர்களும் பாதிக்கும் என்று அவர் தெரிவித்தா

 

Tags :

Share via