மத்திய சிறைகளில் காவலர்களுக்கு மோர் மற்றும் ஐஸ்-நன்னாரி சர்பத் வழங்கும் பணி துவக்கம்.
தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடும் வெயிலில் இருந்து விடுபடும் வகையில், அனைத்து சிறைத்துறை காவலர்களுக்கு இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்க சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி தெரிவித்துள்ளார்.பணியில் உள்ள காவலர்களுக்கும் மற்றும் மத்திய சிறை சாலைக்கு பாதுகாப்புபணிக்கு செல்லும் காவலர்களுக்கும் என அனைத்து மாவட்ட சிறைத்துறை காவலர்களுக்கும் இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்கப்பட்டது. இதை அனைத்து காவலர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி அருந்தி சென்றனர் . கோடை காலம் முடியும் வரை அனைத்து மத்திய சிறை துறை காவலர்களுக்கும் குளிர்ந்த ஜீஸ் வகைகள்,வழங்கப்படும்.என சிறைதுறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags :