ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 12-04-2023 05:34:12pm
ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

கொல்லிமலை வாசனூர்பட்டி அருகே உள்ள நரியங்கிணறுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (34) இவர் நாமக்கல் இந்திரா நகரில் வசித்து வருகிறார். ரயில்வே கூட்ஸில் கர்நாடகா வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் இவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாமக்கல் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கனகராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

 

Tags :

Share via