கணவன் மனைவி தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை
கோவை மாவட்டம், ராமநாதபுரம் அடுத்த, கல்லுக்குழி, புளியகுளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான வினோத்குமார், இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது, மேலும் இவர் மது அருந்திவிட்டு, தனது மனைவியோடு, அடிக்கடி தகராறில், ஈடுபட்டு வந்துள்ளார், இதனால் மன விரக்தியில் இருந்த வினோத் குமார்,நேற்று தனது மனைவியின் புடவையை பயன்படுத்தி, வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார், இது குறித்து இவரது தந்தை கந்தசாமி, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வினோத்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :