ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட இரண்டு பேர் கைது

by Staff / 08-01-2023 02:10:56pm
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட இரண்டு பேர் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார்.அதன்படி நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரசாத் எஸ் எஸ் காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படையினர், பைபாஸ் ரோடு பாலத்தில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பெண் உள்பட இரண்டு பேர் இருந்தனர் அவர்களிடம் விசாரித்த போது கரிமேடு அந்தோணியார் கோவில் தெரு அழகம்மாள் வயது 46, களத்து பொட்டல் தெருவை சேர்ந்த உதயகுமார் 36 என்பதும் ஆட்டோவில் கஞ்சாவை கடத்திச் சென்று விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து இரண்டு பேரையும் கைது செய்தனர். 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via