மணல் கொள்ளை டிஎஸ்பி வாகனத்தை முற்றுகையிட்டும் சாலை மறியல்

by Editor / 22-12-2022 09:19:14am
 மணல் கொள்ளை டிஎஸ்பி வாகனத்தை முற்றுகையிட்டும் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அக்னி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் கடந்த சில தினங்களாக தனிப்படை போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருபவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இதே போல் நேற்று முன்தினம் இரவு திருமணஞ்சேரி அக்னி ஆற்று பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து பணி சென்றபோது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு பொலிரோ பிக்கப் என்ற மினி சரக்கு வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து இரவு நேரம் என்பதால் சேரும் சகதியுமாக இருந்த அப்பகுதியில் இருந்து வாகனத்தை எடுத்து வர முடியாத நிலையில் நேற்று காலையில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் அந்த இரண்டு வாகனங்கள் யாருடையது என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு வாகனம் அரங்குளமஞ்சுவயல் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளருமான தனவேந்தனுடையது என்றும் மற்றொரு வாகனம் அவரது உறவினரான நெய்வேலி வடபாதி அருகே ஆவனாண்டிகொள்ளை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடையது என்று தெரிய வந்தது. இதனையடுத்த போலீசார் இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர் தனவேந்தன் அவரது சகோதரர்களான ராஜதுரை கவிபாலன் உறவினர்களான பிரபாகரன் அமரேசன் ஓட்டுநர் சந்தோஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து அவர்கள் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிந்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via