சட்டப்பேரவை நோக்கி எஸ்டிபிஐ பேரணி

by Staff / 10-09-2023 04:59:15pm
சட்டப்பேரவை நோக்கி எஸ்டிபிஐ பேரணி

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் சட்டப்பேரவை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் பங்கேற்று பேசிய எஸ்டிபிஐ கட்சியில் மாநில தலைவர் நெல்லை முபாரக், “முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் கோரிக்கை என்பது தமிழக முஸ்லிம்களின் பல்லாண்டு கோரிக்கையாகும். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தலைவர்களுடைய பிறந்த நாளின்போது குறிப்பிட்ட வருடங்களை சிறையில் கழித்த ஆயுள் சிறைக் கைதிகளை நன்னடத்தை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்வது என்பது வழமையாகி வருகிறது. ஆனால், ஆட்சிகள் மாறிய போதும் காட்சிகள் மாறவில்லை என்பதற்கிணங்க, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மட்டும் தொடர்ந்து வரும் ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. அரசின் கருணையில் முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகின்றது. தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அவர்களை விரைவாக விடுதலை செய்திட வேண்டும். தமிழக முஸ்லிம்களின் பல்லாண்டு கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என இந்த பேரணி வாயிலாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

 

Tags :

Share via