72 பாம்பு குட்டிகளை கடத்தி வந்த பெண்

by Staff / 10-09-2023 05:04:28pm
72 பாம்பு குட்டிகளை கடத்தி வந்த பெண்

தாய்லாந்திலிருந்து பெங்களூருவுக்கு வந்த இளம் பெண்ணின் பையில் இருந்து 72 பாம்பு குட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதவிர மூன்று சிலந்தி குரங்குகள் மற்றும் மூன்று கபுச்சின் குரங்குகளை கைப்பற்றினர். பையில் வைத்து கடத்தி கொண்டுவரப்பட்டதால் சிலந்தி குரங்குகளும், கபுச்சின் குரங்குகளும் உயிரிழந்த நிலையில் பாம்பு குட்டிகளை மீட்ட போலீசார் அவற்றை மீண்டும் பேங்காக்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய இளம் பெண் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via