போதையில் தகராறு - மகனை அடித்து கொன்ற தாய்
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசாமி. தந்தை இறந்த நிலையில் தனது தாய் பாண்டியம்மாளுடன் வசித்து வந்தார். தினமும் குடித்துவிட்டு தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் நேற்றும் அவர் குடிபோதையில் வீட்டிற்குச் சென்று தாயை தாக்கியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த பாண்டியம்மாள், கையில் கிடைத்த கட்டை மற்றும் கல்லால் அடித்து மகனை கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :