உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, +2 மாணவி தற்கொலை

by Staff / 03-02-2024 02:55:17pm
உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, +2 மாணவி தற்கொலை

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன்.. மனைவி ரம்யா, இவர்களது மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சவுமியாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவரது பெற்றோர் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளனர். கடந்த கடந்த ஒருவாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சவுமியாவுக்கு மருத்துவம் பார்க்க முடியாமல் பெற்றோர் தவித்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சவுமியா  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் உருக்கமாக எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில் இனிமேல் நான் உங்களுக்கு செலவு வைக்க மாட்டேன், எனக்கு செலவு செய்யும் பணத்தில் வீட்டை கட்டி முடிக்கவும் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

 

Tags :

Share via