நீரில் மூழ்கி 86 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்

by Staff / 13-05-2023 04:21:51pm
நீரில் மூழ்கி 86 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டில் 86 பேர் நீரில் மூழ்கி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கிட்டதட்ட 2018-ம் ஆண்டில் இருந்து 289 பேர் வரை கிணறு, கண்மாய், குளம், குவாரியில் தேங்கிய நீர் என பலவகை விபத்துக்களில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும், 2022 ஜனவரி 1 முதல் 2023 மே 10 வரை ஒன்றரை ஆண்டில் 86 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்தி நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via