தமிழகம் முழுவதும் அதிமுக,அமமுக வினர் ஆர்ப்பாட்டம்.

by Editor / 01-08-2023 03:27:58pm
தமிழகம் முழுவதும் அதிமுக,அமமுக வினர் ஆர்ப்பாட்டம்.

கோடநாடு பங்களா குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வலியுறுத்தி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க வினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை, மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு காரணமான குற்றவாளிகள் மீது துரித நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட இரண்டுக்கட்சி ஆதரவாளர்களும் வரும் பாராளுமன்றத்தேர்தலில் தங்களது ஆதரவில்லாமல் வெற்றிபெறமுடியாது என முழக்கமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான  கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள்   கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

Tags :

Share via