இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்கம்
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து பிரதமர் மோடியால் கடந்த வருடம் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக நிறுத்தப்பட்டது. வரும் மே 13ஆம் தேதி ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட வேறொரு கப்பல் இலங்கை செல்ல உள்ளது.கப்பலில் பயணிக்க கீழ் தளத்திற்கு ரூ.5,000, மேல் தளத்திற்கு ரூ.7,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags :