அமராவதி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

by Editor / 12-11-2022 10:15:27am
அமராவதி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் மூணாறு மறையூர் கோவில்கடவு மற்றும் வால்பாறை கிழக்கு பகுதி மலைத்தொடர்,கொடைக்கானல் மேற்கு  பகுதி மலைகளில் பெய்யும் கன மழையால், அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து நள்ளிரவில் 5 ஆயிரம் கன அடிக்கு அதிமாக தண்ணீர் வரத்து வந்ததால் உபரி நீர் முழுமையாக ஆற்றில் திறக்கப்பட்டது.  இதனை அடுத்து தற்போது அமராவதி அணையில் இருந்து உபரி நீர் 5 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via