நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், எய்ம்ஸ் மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

by Staff / 05-07-2023 02:37:35pm
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், எய்ம்ஸ் மாணவர்கள் உட்பட 4 பேர் கைது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த எய்ம்ஸ் மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி எய்ம்ஸ் மாணவர்கள் உட்பட சிலர் சிக்கினர். கடந்த மே 7ஆம் தேதி நடந்த தேர்வில் 7 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு இவர்கள் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி எய்ம்ஸில் 2ஆம் அண்டு பிஎஸ்சி ரேடியோலஜி படிக்கும் நரேஷ் பிஷோர் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். மேலும், சஞ்சய் யாதவ், மஹாவீர், ஜிதேந்திரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஹரியானாவில் மற்றொரு மாணவரின் பெயரில் தேர்வு எழுதிய பின்னர் இவர் பிடிக்கப்பட்டார்.
 

Tags :

Share via